திருமணம் முடிந்த கையோடு மண்டபத்திலேயே வைத்து தம்பதிகள் ரத்த தானம் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விழுப்புரம் நரசிங்கராயன்பேட்டையில் கேசவ பிரகாஷ் - சோனியா தம்பதிகள் இன்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மண்டபத்திலேயே ரத்த தான முகாமை ஏற்பாடு செய்து ரத்த தானம் அளித்தனர். இதைப் பார்த்த அவர்கள் உறவினர் 15 பேரும் ரத்த தானம் கொடுத்தனர். தம்பதிகளின் இந்த புதுவித முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.