உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரில் இந்த கொடூரம் நடந்துள்ளது. ஸ்ரீராம நவமி அன்று தனது மகள் சோனியின் (8) கை, கால்களை கட்டிய சித்தி (லட்சுமி) சிறுமியின் மீது கொதிக்கும் நீரை ஊற்றி கயிற்றால் தொங்கவிட்டு சித்ரவதை செய்துள்ளார். பின்னர், எதிரில் உள்ள காலி வீட்டில் குழி தோண்டி சாக்கு மூட்டையில் சடலத்தை வைத்து புதைத்துள்ளார். தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.