டிக்கெட் கேட்ட நடத்துநர் - தள்ளிவிட்ட போதை ஆசாமி

63பார்த்தது
திருத்தனியில் இருந்து வேலூருக்கு சென்ற தனியார் பேருந்தில் போதை ஆசாமி ஒருவர் ஏறியுள்ளார். அப்போது, பழைய கமலா தியேட்டர் அருகே சென்றபோது பேருந்து நடந்துநர் அவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அந்த போதை ஆசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, நடத்துநரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதனால், நடத்துநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அங்கு கூட்டம் கூடவே அந்த போதை ஆசாமி நைசாக அங்கிருந்து தப்பிச் சென்றார். தற்போது போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி