கட்டுக் கட்டாக பணம்.. ரூ.26 கோடியுடன் சிக்கிய தொழிலதிபர்

569பார்த்தது
கட்டுக் கட்டாக பணம்.. ரூ.26 கோடியுடன் சிக்கிய தொழிலதிபர்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நகைக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வரும் தொழிலதிபரின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது சுமார் 30 மணி நேரம் நடைபெற்றது. இந்த சோதனையில், 7 கார்களில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றப்பட்டன. மேலும், பர்னிச்சர் பொருட்களுக்குள் கட்டுக் கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் என மொத்தம் ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.90 கோடி மதிப்பிலான ஆவணங்கள் இன்று (மே 26) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி