பேருந்து 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து மூவர் பலி

51பார்த்தது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் நேற்று (ஜுலை 13) பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். பலேசாவில் இருந்து தாத்ரிக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த போது பாட்டியாஸ் அருகே விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் பஷிரா பேகம் (50), சலிமா பேகம் (55), பஸ் டிரைவர் முகமது ஆசிப் (25) என அடையாளம் காணப்பட்டனர். சம்பவ இடத்தில் போலீசார், பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி