பெண்ணின் உடலை ரோட்டில் விட்டு சென்ற கொடூரம்

10585பார்த்தது
பெண்ணின் உடலை ரோட்டில் விட்டு சென்ற கொடூரம்
மத்தியப்பிரதேசத்தில் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல் சாலையில் விட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. 53 வயதான நபர் ஒருவர் தன்னுடன் 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மனைவியின் உடலை சாலையில் விட்டுச் சென்றுள்ளார். இந்தூரை சேர்ந்த பெண் உடல் நலக்குறைவால் இறந்த நிலையில், உடன் வசித்து வந்த கணவர் பணமின்றி செய்வது அறியாது கலங்கியுள்ளார்.

மனைவியின் சடலத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்திருந்தார். அங்கிருந்து துர்நாற்றம் வீசியது குறித்து அப்பகுதி மக்கள் விசாரித்தபோது நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து சடலத்தை சாலையோரம் கொண்டு விட்டுச் சென்றுள்ளார். இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாததால் இவ்வாறு செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி