செல்போன் தராத தம்பி - அடித்துக் கொன்ற அண்ணன்

14544பார்த்தது
செல்போன் தராத தம்பி - அடித்துக் கொன்ற அண்ணன்
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (18). இவரது தம்பி பிரனீஷ், நீண்ட நேரமாக சிவக்குமாரின் செல்போனில் வீடியோ கேம் விளையாடியுள்ளார். இதனைப் பார்த்த சிவக்குமார் தொடர்ந்து பலமுறை செல்போனை கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், பிரனீஷ் செல்போனை திருப்பித் தர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிவக்குமார், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தம்பி பிரனீஷை சரமாரியாக தாக்கி கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி