திண்டுக்கல்: அண்ணியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தனது 2வது திருமணத்துக்கு தடையாக இருந்த அண்ணன் மனைவியை சுரேஷ் என்பவர் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிலையில் தற்போது போலீசில் சிக்கினார். சுரேஷை போலீசார் அழைத்து வந்ததை பார்த்த உறவினர்கள் அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது.