முள்ளம்பன்றி தாக்கி பிளஸ் 1 மாணவர் படுகாயம்

76பார்த்தது
முள்ளம்பன்றி தாக்கி பிளஸ் 1 மாணவர் படுகாயம்
கேரளாவின் கண்ணூரில் முள்ளம்பன்றி தாக்கியதில் பிளஸ் 1 மாணவர் காயமடைந்தார். 17 வயதுடைய மாணவன் முகமது ஷாதில் என்பவர் மதரஸாவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு முள்ளம்பன்றி திடீரென சாலையின் குறுக்கே ஓடியுள்ளது. அதன் மீது ஏற்றிவிடாமல் இருக்க நிறுத்திய போது, முள்ளம்பன்றி கடுமையாக தாக்கியது. அதன் கூர்மையான 12 முள் மாணவனின் உடலில் பாய்ந்தது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி