கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் வருமானவரித்துறை ஆர்பாட்டம்

81பார்த்தது
கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் வருமானவரித்துறை ஆர்பாட்டம்
கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் வருமானவரித்துறை ஆர்பாட்டம்



கும்பகோணத்தில் வழக்குரைஞர்கள் மத்திய அரசை கண்டித்து மூன்றாவது நாளாக புதன்கிழமை வருமானவரித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வருமானவரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் எஸ். விவேகானந்தன் தலைமை வகித்தார். மத்திய அரசின் புதிய தண்டனை சட்டங்களை திரும்ப பெற கோரி செயலர் செந்தில் ராஜன், துணைத் தலைவர் இளங்கோவன், பொருளாளர் ராஜா சீனுவாசன், துணைச் செயலாளர் பாலாஜி, நூலகப் பொறுப்பாளர் லட்சுமி , மூத்த வழக்கறிஞர்கள் வி கலியபெருமாள், எஸ் ஜெயராமன், என் நடராஜன், ராஜசேகர், சங்கர் ஆகியோர் பேசினர். முன்னதாக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஏராளமான வழக்குரைஞர்கள், எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி