திருவிசநல்லூர் ஊராட்சியில் கிராமச்செயலகம் திறப்பு விழா

81பார்த்தது
திருவிடைமருதூர் திருவிசநல்லூர் ஊராட்சியில் கிராமச்செயலகம் திறப்பு விழா




தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம், திருவிசநல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், கூட்ட அரங்கம் என அனைத்து அலுவலக பணிகளும் ஒரே கட்டிடத்தில் இயங்கும் வகையில் MGNREGS திட்டத்தின் கீழ் 42. 65லட்சம் மதிப்பீட்டில் கிராமச்செயலக கட்டிடம் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு முன்னிலை வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு தலைமை கொறடா கோவி. செழியன், முன்னாள் எம். பி ராமலிங்கம் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில் திருவிசைநல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி