கருப்பு முருகானந்தம் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

85பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் பா. ஜ. கட்சியின் சார்பில் போட்டியிட்ட பாராளுமன்ற வேட்பாளர் முருகானந்தம் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தஞ்சை பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட கருப்பு முருகானந்தம் செங்கிப்பட்டி , பூதலூர், திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தான் எம் பியாக இல்லை என்றாலும் நமது தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து தான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்து வருவேன் என்றும் தெரிவித்தார். அவருடன் அமமுக பொருளாளர் ரெங்கசாமி, தஞ்சை மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், பாரதிய ஜனதா மாநில விவசாய பிரிவு செயலாளர் பூண்டி வெங்கடேசன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் மற்றும் பா. ஜ. க, கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி