கச்சத்தீவு பற்றி திமுக பேசியதில்லை நிர்மலா சீதாராமன் பேச்சு

63பார்த்தது
கச்சத்தீவு பற்றி திமுக பேசியதில்லை நிர்மலா சீதாராமன் பேச்சு
கச்சத்தீவு பற்றி திமுக எப்போதும் உண்மையைப் பேசியதில்லை என்றார் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தஞ்சாவூர் மேல வீதியில் மூலை அனுமார் கோயில் அருகிலிருந்து தேரடி வரை பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற வாகன பேரணியில் பங்கேற்ற அவர் பேசியது:

கச்சத்தீவை மட்டுமல்லாமல், தமிழக மீனவர்கள் பரம்பரை, பரம்பரையாக மீன் பிடித்துக் கொண்டிருந்த பகுதியையும் சேர்த்து தாரை வார்த்துக் கொடுத்தனர். அதனால், இப்போது வரைக்கும் மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த உண்மையை அனைவரும் எடுத்துப் பேசி, திமுகவை கேள்விக் கேட்க வேண்டும்.
இதை தற்போது மோடி மட்டும் கேட்கவில்லை. சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அக்கேள்வியை விவரமாகக் கேட்டும், கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்ததை அப்போதும், இப்போதும், எப்போதும் திமுக உண்மையைப் பேசியதில்லை.
காவிரியில் தண்ணீர் இல்லாவிட்டாலும், சாராயம் தண்ணீர் போல வருகிறது. இதனால், பல ஆண்கள் சாராயத்துக்கு அடிமையானதால், பல குடும்பங்கள் கெட்டுவிட்டன. எனவே, போதைப்பொருள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை வாக்கு மூலம் நொறுக்குவோம் என்றார் நிர்மலா சீதாராமன்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம்
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி