தஞ்சாவூரில் ஜூன். 28 இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

57பார்த்தது
தஞ்சாவூரில் ஜூன். 28 இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் ஜூன். 28 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலை கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.  


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று பின் மனுக்களை அளிக்க வேண்டும்.  
  

எனவே விவசாய பெருங்குடி மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை  தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி