கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கலியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு. இவரின் மகனுக்கு 3 வருடங்களுக்கு முன் பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (17) என்ற கல்லூரி மாணவருடன் பவித்ரா கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனையறிந்த அலமேலு, இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து இந்த விஷயம் வெளியே தெரிந்துவிடுமோ என்று பயந்த பவித்ரா மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் அலமேலுவை கழுத்தை நெரித்து கொன்று தீ வைத்து எரித்துள்ளனர். இந்நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.