“சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்” - பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்

53பார்த்தது
“சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்” - பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென் சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அதேபோல் பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் அந்த பகுதிக்கு உரிமை கோருகின்றன. சமீபத்தில் தாமஸ் ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் ராணுவம் ரோந்து சென்றது. அப்போது சீன ராணுவம் தாக்கியுள்ளது. இதில் பிலிப்பைன்ஸ் வீரர்கள் காயமடைந்தனர். இந்தநிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், `எந்த ஒரு நாட்டின் மீதும் பிலிப்பைன்ஸ் போர் தொடுக்காது. தங்கள் மீது போரை தொடங்கினால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்' என சீனாவை எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி