தஞ்சையில் ஐடி பார்க் விரைவில் இயங்கும்: திமுக வேட்பாளர்

66பார்த்தது
தஞ்சையில் ஐடி பார்க் விரைவில் இயங்கும்: திமுக வேட்பாளர்
தஞ்சையில் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமை வகித்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார்.
எம்பி பழனிமாணிக்கம், எம்எல்ஏ நீலமேகம், மேயர் சண் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் முரசொலி பேசியது: என்னை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் தொலைபேசி மூலம்
தகவல் கூறினால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன். தஞ்சை தொகுதியில் வேளாண் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.
இப்போது தஞ்சையில் ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணியை விரைவில் முடித்து தஞ்சையை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவேன். தொகுதி முழுவதும் எம்பி அலுவலகம் அமைத்து பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி