கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த காவலாளி

54பார்த்தது
கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த காவலாளி
தஞ்சாவூர் அருகே நார்த்தேவன்குடிகாடு
கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (58). இவர் புதுக்கோட்டை சாலையிலுள்ள பல்பொருள் அங்காடியில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். ஏப்ரல் 14 ஆம் தேதி பணியில் இருந்தார். இவர் கழிப்பறையில் உயிரிழந்து கிடப்பது நேற்று தெரிய வந்தது. தகவலறிந்த மருத்துவக்கல்லூரி காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் இந்த அங்காடியிலுள்ள 3 கழிப்பறைகளில் ஒரு கழிப்பறை இரு நாட்களாக உள்பக்கம் தாழிடப்பட்ட நிலையில் மூடிக்கிடந்தது. தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் இருந்ததைக் கவனித்த ஊழியர்கள் 16 ஆம் தேதி கழிப்பறையின் மேல் பகுதியில் எட்டிப் பார்த்தபோது, உள்ளே கருணாநிதி உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி