தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக சுவாமி புறப்பாடு

72பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மயில் வாகனத்தில்  சிறப்பான புஷ்ப அலங்காரத்துடன் திருக்காட்டுப்பள்ளி பிரதான வீதிகள் வழியாக முருகப்பெருமானின் வீதி உலா நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.   இரவு பழனி ஆண்டவர் வழிபாட்டு சங்க மகளிரணியினர் மதுமிதா தலைமையில் திருப்புகழ் இன்னிசை பாடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி