தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் கிளை துவக்கவிழா

55பார்த்தது
தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் கிளை துவக்கவிழா
தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் பேராவூரணி கிளைத் துவக்க விழா, பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  


நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் புவனேசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மாயாண்டி சங்கக் கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார்.  


நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் அருண், மாநில பொருளாளர் சோலையப்பன், அமைப்பு செயலாளர் ரமேஷ், மாநில துணைத்தலைவர் திருமலை ராஜன், மாநில இணைச்செயலாளர் ரமேஷ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.  


புதிய கிளைத்தலைவராக செல்வராஜ், கிளைச் செயலாளராக சண்முகம், கிளை பொருளாளராக மாரிமுத்து, கிளை துணைத் தலைவராக மணியரசன், கிளை துணைச் செயலாளராக ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  


தமிழகத்தில் அரசு சாரா மின் பணியாளர்களுக்கு என தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு மின் உரிமம் வழங்க, வாரியம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகின்ற எச் மின் உரிமம் தகுதிக்கான தேர்வை வருடம் தோறும் நடத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி