பேராவூரணி அண்ணா சிலை அருகே தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் தேசிய கல்விக் கொள்கையைக் கண்டித்து, வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக மக்கள் புரட்சிக் கழக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் தலைமை வகித்தார்.
தமிழக மக்கள் புரட்சிக் கழக மாநிலத் தலைவர் அரங்க. குணசேகரன், பொதுச் செயலாளர் வி.சி. முருகையன், மாநில அமைப்பாளர் திருமுருகன் மற்றும் மெய்ச்சுடர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். இதில், மத வெறியைத் தூண்டி மக்களின் நல்லிணக்கத்தை சிதைத்து தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிடும் பாஜகவுக்கு எதிராக அனைத்து சமூக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் பல்வேறு தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.