சேதமடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட கோரிக்கை

82பார்த்தது
சேதமடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட கோரிக்கை
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மருங்கப்பள்ளத்தில் புகழ்பெற்ற ஒளஷதபுரீஸ்வரர் என்ற சிவன் ஆலயம் உள்ளது. தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரால் நிர்மானிக்கப்பட்ட இந்த சிவலாயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினசரி பக்தர்கள் வந்து செல்வார்கள்.
பேராவூரணியிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் மருங்கப்பள்ளம், சிவன் கோயில் சாலையில் கல்லணைக் கால்வாய் நாடியம் கோட்டக்குளம் செல்லும் நாடாகாடு கிளை வாய்க்காலின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சேதமடைந்த நிலையில் பாலம் உள்ளது.
இந்த பாலத்தின் வழியாக சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் சென்று வருகின்றனர்.  
பக்கவாட்டில் தடுப்பு சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குருவிக்கரம்பை செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் மாற்றுப்பாதையாக இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் முக்கிய சாலையாகவும் உள்ளது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் உள்ள பக்கவாட்டு சுவர் இல்லாத, சேதமடைந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி