தமிழகத்தில் வெப்ப அலை - எச்சரிக்கும் வானிலை மையும்

17307பார்த்தது
தமிழகத்தில் வெப்ப அலை - எச்சரிக்கும் வானிலை மையும்
கோடை வெயிலுக்கு இடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 24) முதல் மீண்டும் வெப்பம் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது. பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. இந்த நிலையில் இன்றும் (ஏப்ரல் 25) உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.