அய்யனார் கோவில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

77பார்த்தது
அய்யனார் கோவில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி
யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி