வழுத்தூர் கற்பக விநாயகர் கோவில் பால்குடம் காவடி

69பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வலூத்தூர், கற்பக விநாயகர் கோவிலில் பால்குடம், காவடி விழா நடைபெற்றது.
வழுத்தூர் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பெண்கள், குழந்தைகள் உட்பட பக்தர்கள்
பால் குடம், காவடி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் வழுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராமகிருஷ்ணன், மற்றும் கிராம நாட்டாமைகள், கிராமவாசிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிபட்டனர்.