திருப்பாலைத்துறை பாலைவனநாதர் திருக்கோவில் தேரோட்டம்

1101பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள அருள்மிகு தவள வெண்ணகையாள் உடனுறை பாலைவனநாதர் திருக்கோயிலில் சித்திரை பவுர்ணமி பிரமோற்சவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது.  இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.  முன்னதாக வண்ண மலர் அலங்காரத்தில் சுவாமி அம்பாளும் திருத்தேருக்கு எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரின் வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி