தங்கமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா

71பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் ஆலயத்தில் 57 ஆம் வருடம் சித்ரா பவுர்ணமி திருவிழா வெகு விமார்சியாக நடைபெற்றது. அது சமயம் பாபநாசம் குடமுருட்டி ஆற்றில் இருந்து சக்தி கரகம், பால்குடம், புறப்பட்டு 108 சிவாலயம், தெற்கு ராஜவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, கடைவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் கஞ்சிவார்த்தலும் நடைபெற்றது. மாலையில் அம்மன் வீதி உலா காட்சியும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். விழாவில் கோயில் செயல் அலுவலர் விக்னேஷ், ஆய்வாள லட்சுமி, பாபநாசம் பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா, மற்றும் பௌர்ணமி விழா குழுவினர்கள்  பக்தர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி