கைலாசநாதர் ஸ்வாமி கோவிலில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

63பார்த்தது
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி ஸ்ரீ ஆனந்த வள்ளிஅம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஸ்வாமி கோவிலில்  காலபைரவர்க்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது 
முன்னதாக கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வட மாலை சார்த்தப்பட்டது அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை, வழிபாடுகள் மற்றும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், சந்தனம், மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.  
 இதில் கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இறை பணி மன்ற நிர்வாகிகள், கோயில் அர்ச்சகர் கோபு சிவாச்சாரியார், மற்றும் கிராமவாசிகள்  செய்து இருந்தனர்

தொடர்புடைய செய்தி