புரோட்டா மாஸ்டர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை

3981பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அலி அக்பர் (50) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியவர் கீரனுாரில் தங்கி புரோட்டா கடையில் மாஸ்டராக வேலைபார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பஸ் நிலையம் அருகே மயங்கி கிடந்த அலி அக்பரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கீரனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி