ஜம்முகாஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய விமானப் படை வீரர்கள் பயணித்த கான்வாய் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காயமடைந்த வீரர்கள் உயர்சிகிச்சைக்காக விமானம் மூலமாக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சம்பவம் நடந்த பகுதியில் ராணுவ வீரர்கள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.