பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பம்

75பார்த்தது
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பம்
மைசூருவில் காணாமல் போன பெண்ணை சிறப்பு புலனாய்வு குழு மீட்டுள்ளது. காலேனஹல்லி கிராமத்தில் ரேவண்ணாவின் உதவியாளருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அவர் மீட்கப்பட்டுள்ளார். கடந்த 29ஆம் தேதியிலிருந்து தனது தாயை காணவில்லை என்று மைசூரை சேர்ந்த நபர் புகார் அளித்திருந்தார். புகாரில் முதல் குற்றவாளியாக ரேவண்ணா சேர்க்கப்பட்டிருந்தார். இதனையடுத்து புகாரின் மீது, முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் ரேவண்ணா. இந்நிலையில் மீட்கப்பட்ட பெண்ணிடம் பெறப்போகும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் காணாமல் போனாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது தெரியவரும்.

தொடர்புடைய செய்தி