கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

68பார்த்தது
கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
‘கல்லக் கடல்' எனும் நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்றின் விளைவுதான் "கல்லக்கடல்" என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு இன்றும், நாளையும் தமிழகத்தில் ஏற்பட உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகளுக்கு சிகப்பு அலர்ட்டும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் (செங்கல்பட்டு) மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி