நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட
சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட போலீசார் நேரில் ஆய்வு செய்த நிலையில், ஜெயக்குமாரை கொலை செய்ததற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை என கூறியுள்ளனர். தற்போது கிடைத்துள்ள தடயங்களின் அடிப்படையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவில் முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.