கேரள மாநிலம் கொச்சி வித்யாநகரைச் சேர்ந்தவர் 24 வயதான இளம்பெண் வனிஷ்கா. இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டின் குளியலறையில் குழந்தையைப் பெற்றெடுத்தார். தொடர்ந்து, பெற்றோருக்கு தெரியாமல், குழந்தையை பார்சல் கவரில் சுற்றி, சாலையில் வீசிவிட்டார். இதில், குழந்தை உயிரிழந்தது. அதன் பிறகு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் கவரில் இருந்த முகவரி மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டனர்.