சங்கரநாராயண சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா எப்போது?

80பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஶ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகமானது கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் ஒப்புதலின்படி கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 23 தேதி காலை 9. 00 மணி முதல் 9. 45 க்குள் நடைபெறும் என்றும் அதற்கு முன்னதாக ஜூலை மாதம் 05ம் தேதி காலை 6 மணி முதல் 7மணிக்குள் யாகசாலை பந்தல்கால் முகூர்த்தம் நடைபெறும் என திருக்கோவில் இணை ஆணையர், ஊழியர்கள், சிவாச்சாரியார்கள், அறங்காவல் குழு உறுப்பினர்களுடன் அறங்கவலர் குழு தலைவர் சண்முகையா செய்தியாளர்களுக்கு பேட்டி மூலம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி