தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

62பார்த்தது
ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நடந்துள்ள இந்த கைது நடவடிக்கை, மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: Sathiyam News

தொடர்புடைய செய்தி