தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

65பார்த்தது
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் நேற்று (செப்.18)
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது.

தென்காசி உட்கோட்டத்தில் புளியரை மற்றும் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் கவாத்து பயிற்சியினை பார்வையிட்டு, அவர்களின் உடை பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வி ஆர் ஸ்ரீனிவாசன் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.

சிறப்பாக பணிபுரிந்து வரும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி