குளத்தில் அனுமதியின்றி மண் எடுத்த 28 டிராக்டர்கள் சிக்கின

56பார்த்தது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தென்கால் கண்மாய் பாகம்1ல் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் 21 வாகனங்க ளில் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நேற்று இந்த அனுதி பெறுவதற்கு முன்பே 28 டிராக்டர்களில் மண் ஏற்றப்பட்டு அவை புறப்பட தயார் நிலையில் இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 21 வாகனங்களுக்கு மண் எடுக்க அனுமதி வருவதற்கு முன்பே 28 டிராக்டர்களில் மண் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து டிராக்டர்களை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி