கோயில் கும்பாபிஷேகம்: மதுரை ஆதீனம் பங்கேற்பு

62பார்த்தது
கோயில் கும்பாபிஷேகம்: மதுரை ஆதீனம் பங்கேற்பு
ராமநாதபுரம்: கடலாடி அருகே உள்ள அவத்தாண்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வில்லாயுத மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் நேற்று (செப்., 16) விமரிசையாக நடைபெற்றது. 4 கால யாக பூஜையுடன் முடிவடைந்து யாக சாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஸ்ரீ வில்லாயுத மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ ஶ்ரீஞானசம்பந்த தேசிகர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி