நாய் குறுக்கே பாய்ந்ததில் வாலிபர் உயிரிழப்பு

50பார்த்தது
நாய் குறுக்கே பாய்ந்ததில் வாலிபர் உயிரிழப்பு
கன்னியாகுமரி சுனவிளை பகுதியை சேர்ந்தவர் கெபீஸ் ராயல் (20). இவர் நேற்று (அக்., 07) இரவு பைக்கில் மார்த்தாண்டம் சென்று விட்டு தேங்காபட்டணம் வந்து கொண்டிருந்தார். அம்சி பகுதியில் நாய் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது. நிலை தடுமாறி சாலையோரம் நடப்பட்டிருந்த கம்பியில் மோதியுள்ளார்.  படுகாயமடைந்த கெபீஸை குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி