நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி ஒருவர் பலி

83பார்த்தது
நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி ஒருவர் பலி
திருப்பூர் பாண்டியன் நகரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி ஒருவர் உயிரிழந்துள்ளார். 8 பேர் காயமடைந்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. வெடி விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார்த்தி என்பவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி