கர்நாடகாவின் கதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்பண்ணா கோரகி (28) என்பவரும் லலிதா ஹலகேரி (26) என்ற பெண்ணும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி லலிதாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 12) இரவு தாலியைக் கழற்றி வைத்துவிட்டு, கணவர் வீட்டில் இருந்து வெளியேறிய லலிதா, காதலன் அப்பண்ணாவைச் சந்தித்துள்ளார். பின்னர், இருவரும் ஒன்றாக ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதனைக் கண்ட லலிதாவின் கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.