சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவியிடம் கல்வி கட்டணம் உள்ளிட்ட எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து படிப்பை முடிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.