சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை 3) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் பள்ளி மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். இந்த விழாவில் செல்போனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனிதவள மேம்பாட்டுத்துறையில் பணிபுரிவதால் தனக்கு செல்போன் அவசியம் என மாணவரின் பெற்றோர் ஒருவர் பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அரசு ஊழியர் என்பதால் அரங்கத்திற்கு உள்ளே செல்போன் எடுத்து செல்ல அவருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.