தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும்
பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில்
பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 20) தமிழக
பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர், மீண்டும்
பாஜக உறுப்பினராக தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தமிழக
பாஜக மாநிலத் தலைவராக தமிழிசை
பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.