திமுகவில் இந்தமுறை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரமுகர்கள்

1080பார்த்தது
திமுகவில் இந்தமுறை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரமுகர்கள்
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணிக்கு இந்தமுறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியாக கவுதம் சிகாமணி வெற்றிபெற்றிருந்தார். அதேபோல் தஞ்சையில் 6 முறை எம்பியாக இருந்த முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கத்துக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தருமபுரி எம்பியாக இருந்த செந்தில்குமார், சேலம் எம்பியாக இருக்கும் பார்த்திபனுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தென்காசி தனித்தொகுதியில் இருந்து கடந்த முறை வெற்றிபெற்ற தனுஷ்குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இத்தொகுதி ராணி என்ற பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி