டெல்லியில் பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவி தற்கொலை

70பார்த்தது
டெல்லியில் பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவி தற்கொலை
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த அமிர்தவர்ஷினி என்ற மாணவி டெல்லி சட்டப்பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவியின் அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில் “எனது தற்கொலைக்கு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார். மாணவி மன உளைச்சலில் இருந்ததாக சக மாணவிகள் கூறியுள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி