தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை

51பார்த்தது
தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 88% கூடுதலாக பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கேரளா மட்டுமின்றி அதன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி, ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று (ஜூலை 17) வரை தமிழ்நாட்டில் 160.6 மி மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை அளவு 85.5 மி மீ ஆகும். ஆகவே தற்போதுவரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 88% அதிகமாக பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி