இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது!

79பார்த்தது
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது!
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழ்நாடு அரசு பெருமிதம். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் விளையாட்டுத்துறைக்கு ₹1,000 கோடிக்கு மேல் வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். செஸ் ஒலிம்பியாட், மகளிர் டென்னிஸ், ஸ்குவாஷ், ஹாக்கி, கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு ₹87.61 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது" என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி