தமாகா இளைஞரணி தலைவர் ராஜினாமா

76பார்த்தது
தமாகா இளைஞரணி தலைவர் ராஜினாமா
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து யுவராஜா ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள யுவராஜா, "அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தமாகா இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். தமாகா வளர்ச்சிக்காக ஜி.கே.வாசன் தலைமையில் தொடர்ந்து பயணிப்பேன்" என தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலின் போது யுவராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி